இடுகைகள்

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளனர்.  அது மட்டுமில்லாமல்  தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களின் பட ரிலீஸ் தேதியை ஒரு திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் டாப் 10  நடிகர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்பது பற்றியும் ஒரு லிஸ்ட் வெளியாகி, வைரலாகி வருகிறது. மேலும் கோலிவுட்டில் டாப் 10  நடிகர்கள் மற்றும் அவர்களின் சம்பள லிஸ்ட் இதோ: ரஜினிகாந்த்: கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் எப்போதும் கெத்தாக முதலில் இருப்பது ரஜினிகாந்த் தான். இவருக்கு தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு மட்டும் ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்குகிறாராம். விஜய்: தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி உச்சத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தென்னிந்திய திரையுல...

கவிஞர் கண்ணதாசன் பற்றி சுஜாதா

 *கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா* *சொல்கிறார்:*  1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்ச நேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார். அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன். சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை. கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர். எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது. “நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர். சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது. அதன்...

அந்த கால சினிமா நடிகை நடிகர் பெயர்

 அந்தக்காலத்தில் சினிமாவில் பங்கேற்ற பலரும்   இரட்டை இனிஷியல் உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்  PU சின்னப்பா MK தியகராஜ பாகவதர் MG ராமச் சந்திரன்   TR ராமச் சந்திரன்  TKராமச் சந்திரன்  V,K,ராமசாமி , K.R. ராமசாமி , N.S.கிருஷ்ணன், T.A.மதுரம்,  M.N.ராஜம், M.N.நம்பியார்  R.N. நம்பியார், S.S, ராஜேந்திரன், K.A.தங்க வேலு , E.V.சரோஜா, B.S.சரோஜா ,  T.R.ராஜ குமாரி , N.N.கண்ணப்பா T.N.சிவதாணு , T.P.முத்துலட்சுமி, K.B.சுந்தராம்பாள்,  M.S. சுப்பு லட்சுமி, T.R.சுந்தரம், T.R.ராமண்ணா,  B.R.பந்துலு , C.L.ஆனந்தன், S.V.ராமதாஸ், S.V. சேகர், S.V.ரங்காராவ் , S.V.சஹஸ்ரநாமம் , S.V. சுப்பையா  T.S. பாலையா , T.S.துரை  ராஜ்,     P.S.வீரப்பா,      V.N. ஜானகி, S.A. அசோகன், M.S.ராஜேஸ்வரி,  L.R. ஈஸ்வரி| L.R. அஞ்சலி  பாடகி ஜி கிருஷ்ணவேணி  தன்  பெயரை ஜிக்கி [ஜி.கி.]என்று மாற்றிக் கொண்டார் |அவருடைய கணவர் A.M ராஜா பாடகர்:இசையமைப்பாளர்  S.A. அசோகன்  J.P.சந்திர பாபு   ஆனந்த விகடன் ...

திருந்த வழி

 ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான். உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.

புத்தியை தீட்டு

 ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்! நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.. சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!.. நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்! மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவ...